17வது நாள் தொடர் போராட்டம்: பிணக்கோலமும் சான்றிதழ் ஒப்படைப்பும் இன்றைய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் 17வது நாள்(08.09.2014) தொடர்போராட்டம் காலையில் பத்துமணிக்கு தொடங்கியது. நான்கு ஆசிரியர்கள் பிணமாக போராட்டம் செய்ய மாலை, வெள்ளைத்துணி, நெத்திக்காசு ஆகியவை கொண்டு சென்றனர் அவை போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது... மாலை நேரத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க. முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் வருவதாக கூறினார்கள். ஆனால் யாரும் வரவில்லை. அனைவரும் உள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments

Popular posts from this blog