TET வழக்கு :5% தளர்வு G.O 71 குறித்த விசாரணை - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு: 

அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞ்சர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞ்சர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.

காலை 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.எனவே 5% தளர்வு குறித்துயாரும் பயம் கொள்ள வேண்டாம். 

அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள்.. 

அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board க்கென ஒரு தனியான கலந்தாய்வும் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அந்த வாதங்களை முன் வைத்த வழக்குரைஞ்சர்களிடமே முன் வைத்தார்.அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இல்லையென்றே பதில் வந்தது.

அதைப்போலவே CBSC,STATE BOARD க்கு என தனித்தனியான weightage மதிப்பெண் வழக்கும் முறை கடைபிடிக்க முடியாது என நீதிபதி அவர்களே தெரிவித்துள்ளார்கள்.வாதிகளின் பல கேள்விகளுக்கு நீதிபதிகள் அவர்களே எதிர் கேள்வி கேட்டு நியாத்தை வெளிக்கொணர்கிறார்கள். அரசு தரப்பில் வாதாடும் AG அவர்களும் இன்ன பிற வழக்குரைஞ்சர்களும் சிறப்பாக வாதாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாதங்கள் தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. G.O 71 க்கு எதிரான வாதம் இன்று காலை 11 அளவில் வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞ்சர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞ்சர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது .

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. இதற்கு மேல் வாதங்கள் கிடையாது.மேலும் யாரேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால் எழுத்து பூர்வமாக மட்டுமே அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

Comments

Popular posts from this blog