தமிழகத்தில் குறைந்த கல்வித்தகுதியில் வேலை பார்க்கும் ஒரு லட்சம் ஆசிரியர்கள்
தமிழகத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் குறைந்த கல்வித்தகுதி உடையவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்த்து 5 லட்சத்து 8 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஒரு லட்சத்து 14 ஆசிரியர்கள் பிளஸ்–2 மற்றும் அதற்கு கீழ் தகுதி உடையவர்கள் என தெரிய வருகிறது.
கல்விக்கான மத்திய மாவட்ட தகவல் திட்டம் மூலம் 2013–14 சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 80,659 ஆசிரியர்கள் பிளஸ்–2 கல்வி உடையவர்கள் என்றும், 33,679 ஆசிரியர்கள் இடை நிலை கல்வி (10–ம் வகுப்பு) கல்வி தகுதி பெற்றவர்கள் என புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 391 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 12 பேரும் உள்ளனர். எம்.பி.எல் மற்றும் பி.எச்.டி டாக்டர் தகுதி 37,624 பேர் தகுதியுடன் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
பிளஸ்–2 படித்து 2 வருடம் ஆசிரியர் பயிற்சி முடித்து தகுதி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 1 முதல் 5–ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் பணி செய்து வருகின்றனர். 20 வயதிற்கு முன் ஆரம்ப பள்ளியில் பணியாற்றும் தகுதி பெறுகின்றனர்.
உயர் கல்வி எனும் பட்டப்படிப்பு படிக்காமலேயே 1 முதல் 5ம் வகுப்புகளுக்கும் தொடக்க கல்வி எனும் அடிப்படை கல்வியை மாணவர்களுக்கு கற்று தரும் பணியில் ஒரு லட்சத்திற்கு மேலான ஆசிரியர்கள் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment