2 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் 2.5 லட்சம் காலியிடம்’!!!
‘இன்னும் இரு ஆண்டுகளில், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில்
இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாகப் போகின்றன’ என, இலவச பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ‘பாரதி கல்வி, வேலை வாய்ப்பு’ இலவச பயிற்சி மைய துவக்க விழா, ஊட்டி ஹில்பங்க் சந்திப்பில் உள்ள சி.ஐ.டி.யு., அலுவலகத்தில், நடந்தது.
இந்த மையத்தில், பிரதி ஞாயிறு கிழமைகளில், காலை முதல் மதியம் வரை, தகுதி வாய்ந்த பயிற்றுனர்கள் மூலம், வங்கித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தகுதி தேர்வு, வி.ஏ.ஓ., உட்பட அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சியை துவக்கி வைத்து, பயிற்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன இணை செயலர் மகேஷ்வரன் ஆகியோர் கூறியதாவது:
பலருக்கு, அரசுப் பணி என்பது, கானல் நீர் தான். அரசுப் பணிக்கான போட்டி தேர்வுக்கு இளைஞர்களை தயார்படுத்த, பயிற்சி வகுப்பு என்ற பெயரில் பெரும் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இது சாத்தியமில்லை என்ற நிலையில், மாநிலம் முழுக்க, 30 இலவச பயிற்சி மையங்களை ஏற்படுத்தி, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை குறித்து, இலவச பயிற்சி வழங்கி வருகிறோம்.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு துறைகள், வங்கி உட்பட பொதுத் துறை நிறுவனங்களில், வெளியூரைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பணிபுரிகின்றனர்; நீலகிரி மாவட்ட இளைஞர்களுக்கு அரசுப்பணி எளிதாக கிடைப்பதில்லை. மாநில அரசு துறைகள் மற்றும் வங்கி உட்பட பொதுத் துறை நிறுவனங்களில், அடுத்த இரு ஆண்டுகளில், 2.50 லட்சம் பேர் பணி ஓய்வு பெறவுள்ளனர்; காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஊட்டியில் நடக்கும் இலவச பயிற்சி மையத்தில், அதிகளவு இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி பெற்று, அரசுப் பணியை பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment