ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்து அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காது மேலும் இனி வரும் காலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறாமல் இருக்கப்போகிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மீன்டும் மாநில பதிவு மூப்பு கூட அமல் ஆகலாம் அல்லது தற்போது தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்கலாம் என்ற ஒரு தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தேர்வு பெற்றவர்களின் பணி நியமனம் உடனடியாக நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கல்வித்துறையை சார்ந்த ஒருவர் இதனை கூறினார் கண்டிப்பாக நல்லதே நடக்கும் என்று அனைவரும் நம்புவோம்
thanks to gurugulam.com
News update 16/9/2014
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment