தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேல்நிலைப்பள்ளியில் ஒன்பது முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ஒரு தலைமை ஆசிரியர் என 10 பேர் இருக்க வேண்டும்; உயர் நிலைப்பள்ளியில் ஐந்து பட்டதாரி ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் என ஆறு பேர் இருக்க வேண்டும்.
அதன்படி, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் 300 பேர், மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரம் பேர் என 1,300 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, உடனடியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் பணியிடம் நிரப்ப தாமதமானால், மாணவர் கல்வி நலன் பாதிக்கப்படும்; பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள் ளது. பதவி உயர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமிக்க காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு "கவுன்சிலிங்' நடத்தி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment