FLASH NEWS : செவ்வாய்க் கிழமை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
07.10.2014, செவ்வாய்க் கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை. - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு. ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் மூடல். தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இளங்கோவன் சேலத்தில் பேட்டி அளித்தார். தமிழகத்தில் 4,500 தனியார் பள்ளிகளும் அக்டோபர் 7 தேதி அன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக, வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டமைப்பின் செயலர் இளங்கோ, சேலத்தில் வௌியிட்டுள்ளார்.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment