TET இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் போராட்டம்.
இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி, சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம்முன் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடந்தாண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடந்த தகுதி தேர்வு நடைபெற்ற நிலையில், பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைகளில் மட்டும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மை மொழி உள்ளிட்ட துறைகளில் ஆயிரத்து 260 பணி இடங்களுக்கான தேர்வு பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். அதனால், உடனடியாக இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment