உண்ணா விரதப் போராட்டம் 

 கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம்   மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது .இதை நடைமுறைபடுத்தக் கோரி மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் பார்வைக்கும் ,மாண்புமிகு முதலமைச்சர்  அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது .

தேதி: 24.11.2014,திங்கள்கிழமை 
நேரம் :காலை 10.00 மணி முதல் மாலை  5.00 மணி வரை 
இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை ,சென்னை 

அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்! 

     இப்படிக்கு 
                                                                                                             
   சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் 

குறிப்பு : 23.08.2010க்கு முன்பு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் .

Comments

Popular posts from this blog