வேண்டுகோள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம்

 மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கும் ,மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான பார்வைக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவுகளை நடைமுறைபடுத்தக் கோரி ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணா விரதப் போராட்டம்.

தேதி: 24.11.2014,திங்கள்கிழமை 
 நேரம் :காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 
 இடம் : சேப்பாக்கம்,சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகில் 

 23.08.2010 நடவடிக்கைக்குட்பட்டு பழைய நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள சுமார் 8000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் ClauseV வழிக்காட்டுதல்படி நியமனம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற இருநபர் நீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவு வழங்கி உள்ளது (R.A No 139/2012 and W.A No 2121/2012 Date:09.07.2013).இதனை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளையும் உத்தரவு வழங்கி உள்ளது.இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றமும் சிறப்பு விசாரணை மூலம் உத்தரவு வழங்கி உள்ளது ( SLP 3860-3861 Date:23.09.2014 )என்பது குறிப்பிடத்தக்கது 

இப்படிக்கு 
 தமிழ்நாடு புவியியல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண் 77/2009 வேலையில்லா தமிழ் பட்டதாரி ஆசிரியர் சங்கம் பதிவு எண் 208/2007 பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் பதிவு எண் 24/2007 

அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்!

Comments

Popular posts from this blog