விஏஓ தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை
நீண்டகாலமாக வெளியிடப்படாமல் இருக்கும் விஏஓ தேர்வு முடிவுகளை வெளியிட ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மையம் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி 2,324 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்துத் தேர்வு நடத்தியது.
இதில் லட்சக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் பங்கேற்று எழுதினர். இந்நிலையில் தேர்வு எழுதி, ஐந்து மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும் தேர்வு முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
முன்னரே இப்பணிக்கு தேர்வான பலரும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் எழுதி உயர்பதவிகளுக்குச் சென்றுவிட்டனர்.
இதனால் பல கிராம நிர்வாக அலுவலர்களும் கூடுதலாக இரண்டு அல்லது மூன்று கிராமங்களை கவனித்து வருகின்றனர். ஆகவே, இவர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக பள்ளிக்கூடம்.காம் தேர்வு எழுதிக் காத்திருப்பவர்கள் நலனை கருத்தில் கொண்டு விஏஓ தேர்வு முடிவுகளை உடனே வெளியிட்டு பணிநியமனம் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment