ஒ௫ நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? *மெல்லிய புன்னகை இருக்க வேண்டும். *சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும். *தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும். *அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது. *பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும். *சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும். *மாணவர்களின் மனநிலையை புரிந்துக்கொண்டவராக இருக்க வேண்டும். *பாடம் நடத்தும் போதும், வீட்டுவேலைகளை கொடுக்கும்போதும் மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும். *தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்கு கூட கொண்டுவரக்கூடாது. *தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் பக்தியுடன், ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்படவேண்டும். *ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டபழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துகொள்ள வேண்டும். *எப்போதும் திட்டக்கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக்கூடாது. *எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி, வெறுப்பேத்தக்கூடாது. *எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது, நீங்கள் பேசுவதில் எத்தனை சதவீதம் உணமை, எத்தனை சதவீதம் டுபாக்கூர் என மாணவர்களால் உணர முடியும். *ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்கவேண்டும், குறைந்திருக்கக்கூடாது. *படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.

Comments

Popular posts from this blog