TNPSC: 5000 பணியிடத்துக்கு 10 லட்சம் பேர் பதிவு  

குரூப் - 4 தேர்வுக்கு, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வரும் டிசம்பர் 21ம் தேதி, குரூப் - 4 தேர்வை நடத்துகிறது.இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு, 4,963 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கு, அக்டோபர் 14ம் தேதி முதல், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, பதிவு நடந்து வருகிறது. விண்ணப்பிக்க, நவ., 12ம் தேதி கடைசி நாள்.இதுவரை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog