தமிழகத்தில் காலியாக உள்ள உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எப்போது TRB-ஆல் நடத்தப்படும்? தமிழகத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.அரசு இதுவரை இப்பணியிடங்களை நிரப்புவதற்கு இரண்டு முறை அரசாணையும் வெளியிட்டுள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்த தேர்வுக்காக பல பட்டதாரிகளும்.,ஆசிரியர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து இத்தேர்வினை நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பட்டதாரிகள் மற்றம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog