தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் எழுதியடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ‘கீ ஆன்சர்’ வெளியீடு

தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 4 ஆயிரத்து 963 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த 21ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வை 10 லட்சம் பேர் எழுதினர். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம், பொது அறிவு ஆகிய பகுதிகளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம்.

அதன்படி, குரூப் 4 தேர்வுக¢கான உத்தேச விடைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள்இணையதளத்தில் விடைகளை சரிபார்த்துக்கொள்ளலாம். இந்த விடைகளில் ஏதாவது ஆட்சேபனைஇருந்தால், அது தொடர்பாக 7 நாட்களுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தெரிவிக்கலாம். வரும் 30ம் தேதிக்கு பிறகு வரும் ஆட்சேபனைகள் ஏற்றுக் கொள்ளப்படாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog