TET 2015 -ஏப்ரல் மாதத்தில் நடைபெறுமா?

ஆண்டுக்கு அதிக அளவிலான தகுதி தேர்வுகளை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு சில நாட்கள் ஆகிறது. ஆண்டுக்கு ஒரு தகுதி தேர்வை நடத்துவதே பெரும்பாடாக இருக்கும்போது அதிக அளவிலான தேர்வுகளை நடத்துவது சாத்தியமா என தெரியவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் அடுத்த தகுதி தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் அடுத்த தேர்வு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் கற்பித்தலில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

அடுத்த கல்வியாண்டிலாவது ஆசிரியர்களை நியமனம் செய்யும் வகையில் ஏப்ரல் இறுதிக்குள் தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Comments

Popular posts from this blog