முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு& வரும் 16 ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு ம் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 16 ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு ம் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப காலியாக உள்ள 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை கடந்த மாதம் 10 ம் தேதி நடத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய அந்த தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உத்தேச விடைகள் கடந்த ஜனவரி 22 ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு 29 ம் தேதி வரை கருத்துகள் கேட்கப்பட்டன. தேர்வர்களின் கருத்துகளை வல்லுனர் குழுவினைக் கொண்டு ஆராய்ந்து இறுதி விடைகள் தயார் செய்யப்பட்டு , விடைத்தாள் கம்ப்யூட்டர் மூலம் திருத்தப்பட்டன.

தற்பொழுது எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இறுதி விடைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் வரும் 16ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. இதற்கான இடம் குறித்த அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுவதுடன், அழைப்பு கடிதங்களும் ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog