பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா? இன்று நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில், 1.ஒரு மதிப்பெண் வினாவில் 15வது கேள்வியில் தமிழில் "ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள்அல்லது3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Probability of getting 3 headsand3 tails in tossing a coin 3 times is:"என்று உள்ளது.

2.5 மதிப்பெண் வினா பகுதியில் வினா எண் 38ல் தமிழில் "(0,5), (-2,-2), (5,0), (7,7) என்ற புள்ளிகளை உச்சிகளாக கொண்டநாற்கரமானது ஒரு சாய்சதுரம்என நிரூபி" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Prove that (0,5), (-2,-2), (5,0) and (7,7)are the vertices of a rhombus." என்று உள்ளது.மேற்காணும் தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comments

Popular posts from this blog