ஹரியானாவில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மற்றும் அவரது மகன் அஜய் சௌதாலா மற்றும் 3 பேருக்கு வழங்கப்பட்ட தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை தில்லி உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

ஹரியாணா முதல்வராக சௌதாலா இருந்தபோது, இளநிலை ஆசிரியர் நியமனத்தில் ஊழல் புரிந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு கீழ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 50 குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ள தில்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுக்கள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும், அனைவரும் உடனடியாக சரணடையுமாறும் உத்தரவிட்டுள்ளது.


Comments

  1. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம், கலந்தாய்வு எப்போது அறிவிப்பு வெளியாகும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog