அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் நியமனம்.சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நாளை கடைசி வாய்ப்பு

அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நாளை (புதன்) மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண். வசுந்திராதேவி அவர்கள்செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற ஆணையின்படி ,மாநில வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் 652 கணினி பயிற்றுநர் காலிப்பணீயிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களூக்கு மார்ச்2 ந் தேதி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது,அதையும் பயன்படுத்தாதவர்களுக்கு இறுதியாக நாளை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.அதற்கான ஆதாரங்களுடன் குறிப்பிட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் கலந்து கொள்ளலாம்,இனி மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது . மதுரை ,சிவகங்கை ,இராமநாதபுரம்,திருநெல்வேலி,கன்னியாகுமரி, விருதுநகர்,தேனி,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் கலந்து கொள்ளாதவர்களுக்கு மதுரை ஓ.சி.பி.எம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்றும்,நாளையும்(மார்ச்3,4) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.


Comments

Popular posts from this blog