தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் : டிஎன்பிசி மீது குற்றச்சாட்டு 

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடித்து வருவதாக,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மீது தேர்வு எழுதியவர்கள் புகார்தெரிவித்துள்ளனர்.கடந்த 2014-ம் ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வு, 2015-ம் ஆண்டுநடத்திய குரூப்-1 தேர்வு, நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்-2 தேர்வு மற்றும் கடந்து ஆண்டு நடந்த ஆய்வக உதவியாளர் தேர்வு என இத்தேர்வுகளை மொத்தம் 20லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். 

தேர்வு முடிவுகள் வெளியிடுவதில்தொடரும் கால தாமதத்தால் தேர்வர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் நிலைஏற்பட்டுள்ளது. எனவே மேலும் காலம் தாழ்த்தாமல் தேர்வு முடிவுகளை வெளியிடவேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog