எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு செய்முறை பயிற்சிக்கு இன்று முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் 

வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு செய்முறைப் பயிற்சிக்கு மாணவர்கள் வியாழக்கிழமை முதல் பதிவு செய்யலாம் என புதுச்சேரி முதன்மைக் கல்வி அலுவலர் நா.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2017-ல் மார்ச், ஏப்ரலில் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள அனைத்து நேரடி மற்றும் தனித்தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்களும், ஏற்கனவே 2012-க்கு முன்னர் பழையப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்று அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு பெயர் பதிவு செய்யாத தனித்தேர்வர்களும்) அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அனைத்து தனித்தேர்வர்களும் அதற்கான விண்ணப்பங்களை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (10.6.16) முதல் 30.6.16 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், விவரங்களை இரண்டு நகல்களில் பூர்த்தி செய்து விண்ணப்பங்கள் மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ. 125-ஐ (பணமாக செலுத்த வேண்டும்) ஆண் விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் சாலைத் தெரு அரவிந்தர் ஆங்கில மேல்நிலைப் பள்ளியிலும், பெண் விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் வரும் 30ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்ட தேர்வர்கள் மட்டுமே மார்ச், ஏப்ரல் 2017-ல் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ளாதத தேர்வர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ள இயலாது.

Comments

Popular posts from this blog