உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

முதுநிலை கணிதப் படிப்பு படிப்போருக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, வரும், 29ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தேசிய உயர்கல்வி கணித வாரியம் சார்பில், கணிதப் படிப்புகளை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி.,யின் கணித பிரிவு படிப்போருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் அனுப்ப, 29ம் தேதி கடைசி நாள் என, கணித வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, செப்., 17ல் உதவித்தொகை பெறுவோருக்கான தேர்வு நடக்கிறது. இதற்கான கூடுதல் தகவல்களை, http://www.nbhm.dae.gov.inஎன்ற இணையதளத்தில் அறியலாம்.

Comments

Popular posts from this blog