கவன ஈர்ப்பு போராட்டம்
நாள் :30/08/2016
இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்


மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!

*2010ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 34 ஆயிரம் பி.எட் பட்டதாரிகளில், பணி நியமனம் பெற்றவர்கள் போக 8 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தகுதி தேர்வில் விலக்களித்து நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

*அரசானை எண் :193,46,169,170ல் மொத்தம் 2054+2064+3816+1242=9176 பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

*NCTE 29.07.2011அன்று ஓர் அறிக்கை வெளியட்டது அதில் 23.08.2010 முன்னர் ஆசிரியர் நியமனம் குறித்து விளம்பரமோ அல்லது நியமன நடவடிக்கைத் தொடங்கிருந்தாலோ அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என அறிவுறுத்தியது.

*இம்மனுவை விசாரித்த நீதியரசர்கள் எலிப் தர்மராவ் மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு 07.07.2013 அன்று மனுதார்களுக்கு (94 பேர் ) தகுதித் தேர்வின்றி வருங்கால காலிப்பணியிடங்களில் பணி வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

*பள்ளிக் கல்வித்துறை 90 நாட்களுக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் 18.12.2013 அன்று மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் 23.09.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் காலிப்பணியிடம் மற்றும் நிரப்பிய விதம் குறித்து ஐந்து வினாக்களை எழுப்பி தீர்வு காண வேண்டும் எனவும் மனுதார்கள் வெற்றிபெறும் பட்சத்தில் முன்தேதியிட்டு பணி வழங்கிட வேண்டும் என வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்துகொள்ளவே பல மாதங்கள் ஆயிற்று. மேலும் நீதிபதி அக்னி கோத்ரி மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு மூன்று விசாரணை முடித்தபிறகு இவ்வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். பின்னர் நீதிபதி சிவஞானம் மற்றும் சொக்கலிங்கம் அமர்வு எங்கள் மனுவை விசாரித்து அதன் இறுதி வாதம் 04.09.2015 அன்று வந்தது. அன்று இருதரப்பினைரையும் எழுத்துபூர்வமாக அறிக்கை தர உத்தரவிட்டனர். இதன் இறுதி தீர்ப்பு 03.11.2015 அன்று வெளியானது. அதில் இம்மனுதார்களுக்கு பணி வழங்கப்பட்டால் இதேபோல் 20,000 பேருக்கும் தீர்வின்றி நியமிக்க வேண்டிவரும் என வழக்கை தள்ளுபடி செய்தனர்.

*இதில் சிறுதும் உண்மையில்லை. தீர்ப்பில் நிறைய குளறுபடிகள் உள்ளது என்பது ஆதாரத்துடன் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. உச்சநீதிமன்றம் தீர்வுக்கானச் சொன்ன மொத்த காலிப் பணியிடம் குறித்து நாம் எடுத்துவைத்த G.O 145 முதல் 170 வரையிலான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 25,572 அதில் நிரப்பப்பட்ட பணியிடங்கள் 16396 மீதமுள்ள காலிப் பணியிடம் 9176ஐ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

2.G .O 175 நாள் 08.11.2011ஐ கவனத்தில் கொள்ளவில்லை. மேற்கண்ட ஆணை அன்றைய தேதி வரை உள்ள காலிப் பணியிடம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பட வேண்டும் என தெளிவுபடுத்துகிறது.

3.G .O 20 நாள் :31.01.2011சான்றிதழ் சரிபார்பின் காலக்கெடுவை ஒரு வருடத்திற்கு நீடித்ததை கவனத்தில் கொள்ளவில்லை.

4. NCTE29.07.2011அன்று ஓர் அறிக்கை வெளியட்டது அதில் 23.08.2010 முன்னர் ஆசிரியர் நியமனம் குறித்து விளம்பரமோ அல்லது நியமன நடவடிக்கைத் தொடங்கிருந்தாலோ அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என அறிவுறுத்தியது கவனத்தில் கொள்ளவில்லை.

5. selection process பற்றி உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகு அதாவது நியமன முறை விவாதிக்க வேண்டாம் என அறிவுரையும் பின்பற்றவில்லை.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய போதிய நிதி கிடைக்கவில்லை அதனால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சீராய்வு மனு இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் விசாரனைக்கு வருகிறது.

*இப்பணியிடங்களை நிரப்ப கோரி மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .

Comments

Popular posts from this blog