பி.எட்., 2ம் கட்ட கவுன்சிலிங் அறிவிப்பு

பி.எட்., இரண்டாம் கட்ட கவுன்சிலிங், செப்., 15 மற்றும், 16ல் நடக்கிறது.

ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லுாரி களில், 1,777 பி.எட்., இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

 கடந்த, 22ல், முதல் கட்ட கவுன்சிலிங் துவங்கி, நேற்று முடிந்தது; இதில், 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், செப்., 15 மற்றும், 16ல் நடக்கும் என, மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர் தில்லை நாயகி அறிவித்துள்ளார்.


அவர் கூறும்போது, 'ஏற்கனவே விண்ணப்பித்தவர்களில், முதல் கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்படாத, 1,000 பேர் உள்ளனர். அவர்களுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண், செப்., 9ல் இணையதளத்தில் வெளியிடப்படும். பின், தகுதி உள்ளவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும்' என்றார்.

Comments

Popular posts from this blog