மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தும்  மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் 

நாள் :26/05/2017
இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் 

மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!


கிழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை பாருங்கள்


 *அரசானை எண் :193,46,169,170ல் மொத்தம் 2054+2064+3816+1242=9176 பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். இப்பணியிடங்களை நிரப்ப கோரி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்   .

*அரசாணைஎண் .181 தேதி :15.11.2011 அன்றுதகுதித்தேர்வின்அடிப்படையில்ஆசிரியர்நியமனம்எனபள்ளிக்
 கல்வித்துறைஅறிவித்தது. இதுகடந்தகாலஆட்சியில்வேலைவாய்ப்புஅலுவலகம் மூலம் பதிவுமூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்த்து அடுத்து வரும் காலிப்பணியிடங்களில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த நமக்கு பேரிடியாக இருந்தது.

*இதை அரசின்க வனத்திற்கு எடுத்துச் செல்ல பல வழிகளில் முயன்றும் தோல்வியே கிட்டியது.பின்னர் பாதிக்கபட்ட அன்பரசு குழுவில் 70 பேரும்,பரந்தாமன் குழுவில் 24 பேரும் 2012 ஆம்ஆண்டு சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர் .

*NCTE 29.07.2011அன்றுஓர்அறிக்கைவெளியட்டதுஅதில் 23.08.2010 முன்னர்ஆசிரியர்நியமனம்குறித்துவிளம்பரமோஅல்லதுநியமனநடவடிக்கைத்தொடங்கிருந்தாலோஅவர்களுக்குதகுதித்தேர்வில்இருந்துவிலக்குஅளிக்கலாம்எனஅறிவுறுத்தியது.

*இம்மனுவை விசாரித்த நீதியரசர்கள் எலிப்தர்மராவ் மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு 07.07.2013 அன்று மனுதார்களுக்கு (94 பேர் ) தகுதித்தேர்வின்றி வருங்கால காலிப்பணியிடங்களில் பணி வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.



*ஆனால் பள்ளிக் கல்வித்துறை 90 நாட்களுக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் 18.12.2013 அன்றுமேல்முறையீடு  செய்தது. உச்சநீதிமன்றம் 23.09.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் காலிப்பணியிடம் மற்றும் நிரப்பிய விதம் குறித்து ஐந்து வினாக்களை எழுப்பி தீர்வு காண வேண்டும் எனவும் மனுதார்கள் வெற்றி பெறும்பட்சத்தில் முன்தேதியிட்டு பணிவழங்கிட வேண்டும் என வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்து கொள்ளவே பல மாதங்கள் ஆயிற்றுமேலும் நீதிபதி அக்னிகோத்ரி மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு மூன்று விசாரணை முடித்தபிறகு இவ்வழக்கை வேறுஅமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

பின்னர் நீதிபதி சிவஞானம் மற்றும் சொக்கலிங்கம் அமர்வு எங்கள் மனுவை விசாரித்து அதன் இறுதி வாதம்  04.09.2015அன்று  வந்தது. அன்று இருதரப்பினைரையும் எழுத்து பூர்வமாக அறிக்கை தர உத்தரவிட்டனர்.

*இதன்இறுதிதீர்ப்பு 03.11.2015அன்றுவெளியானதுஅதில் இம்மனுதார்களுக்கு பணி வழங்கப்பட்டால் இதேபோல் 20,000 பேருக்கும் தீர்வின்றி நியமிக்க வேண்டிவரும் என வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதில்சிறுதும் உண்மையில்லை.  தீர்ப்பில் நிறைய குளறுபடிகள் உள்ளது என்பது ஆதாரத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.உச்சநீதிமன்றம் தீர்வுக்கானச் சொன்ன மொத்த காலிப்பணியிடம் குறித்து நாம் எடுத்து வைத்தG.O  145முதல் 170 வரையிலான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 25,572 அதில் நிரப்பப்பட்ட பணியிடங்கள் 16396 மீதமுள்ளகாலிப் பணியிடம்  9176ஐகணக்கில்எடுத்துக்கொள்ளவில்லை.


2.G.O175 நாள் 08.11.2011ஐகவனத்தில்கொள்ளவில்லை.மேற்கண்ட ஆணை அன்றைய தேதி வரை உள்ள காலிப்பணியிடம் முழுவதும் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பட வேண்டும் என தெளிவுபடுத்துகிறது.

3. NCTE29.07.2011அன்று ஓர் அறிக்கை வெளியட்டது அதில் 23.08.2010 முன்னர் 
ஆசிரியர் நியமனம் குறித்து விளம்பரமோ அல்லது நியமன நடவடிக்கைத் தொடங்கிருந்தாலோ அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என அறிவுறுத்தியதுகவனத்தில்கொள்ளவில்லை.

4. selection processபற்றிஉச்சநீதிமன்றம்  தெளிவுபடுத்தியபிறகு
அதாவது நியமன முறை விவாதிக்க வேண்டாம் என அறிவுரையும் பின்பற்றவில்லை.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய  போதிய நிதி கிடைக்கவில்லை அதனால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது.வழக்கு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் விசாரணைக்கு வருகிறது.

இப்படிக்கு 
அனைத்து மாவட்ட பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் 

தொடர்புக்கு 

அன்பரசு (9842824503)


மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!






Comments

Popular posts from this blog