பள்ளிகள் திறப்பு ஜூன் 7-க்கு ஒத்திவைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்



k-a-sengottaiyan
கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 7-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பிடம் கட்டுவது தொடர்பான இந்த ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்துடன் விவாதிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஜூன் 1-ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

Comments

Popular posts from this blog