நீட் தேர்வு முடிவு வெளியாவது எப்போது?

11 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் 85 ஆயிரம் பேர் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்ததையொட்டி தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்தும், வருகிற 26–ந் தேதிக்குள் தேர்வு முடிவை வெளியிடலாம் என்றும் கடந்த 12–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே தேர்வு முடிவு நேற்று வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் நீட் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்படவில்லை. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. அதிகாரி ஒருவர் கூறுகையில் நீட் தேர்வு முடிவு வெளியிடும் தேதி விரைவில் வெளியிடப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog