'TET - 2017' தகுதி தேர்வில் 4.64 சதவீதம் தேர்ச்சி - தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்

       ஆசிரியர் பணிக்கான 'டெட்தகுதி தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில், 4.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்கணிதம்அறிவியல் பாடப்பிரிவில்
தேர்ச்சி குறைந்துள்ளது.


தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் புதியஆசிரியர்களை நியமிப்பதற்கான 'டெட்தகுதி தேர்வு ஏப்ரல் 29,30ல் நடந்தது.இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தனித்தனியாகதேர்வு நடந்ததுமுதல் தாளில் 2.41 லட்சம் பேரும்இரண்டாம் தாளில் 5.12லட்சம் பேரும் பங்கேற்றனர்அவர்களில் 4.64 சதவீதமான 34 ஆயிரத்து, 979பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதாவது முதல் தாள் எழுதியவர்களில் 6.71 சதவீதத்தினரும்இரண்டாம் தாள்எழுதியவர்களில் 3.66 சதவீதத்தினரும் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளனர்.குறிப்பிட்ட பாடங்களில் தேர்வு எழுதியோரில் கணிதம் மற்றும்அறிவியல் பாடத்தை தேர்வு செய்தவர்களில் 2.72 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2012ல், 'டெட்தேர்வு அறிமுகமான போது 7.14லட்சம் தேர்வு எழுதி 2.448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

அதனால் கேள்வித்தாள் மிக கடினமாக இருப்பதாக மறு தேர்வுக்கு பட்டதாரிகள்கோரிக்கை விடுத்தனர்இதையடுத்து எளிமையாக்கப்பட்ட வினாத்தாளுடன்துணை தேர்வு நடத்தப்பட்டதுஇதில் 2.99 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றனர்.பின் 2013ல் நடந்த தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 6.62லட்சம் பேர் பங்கேற்றதில் 4.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்இந்த ஆண்டுநடந்த தேர்வில்தேர்ச்சி சதவீதம் 4.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Comments

Popular posts from this blog