’குரூப் - 1’ தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு

எழுத்தின் அளவு :
சப் - கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, 74 பணியிடங்களுக்கான, ’குரூப் - 1’ தேர்வின், இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுத்துறைகளில், டி.எஸ்.பி., - 26, சப் - கலெக்டர் - 19, வணிகவரித்துறை உதவி கமிஷனர் - -21, மாவட்ட பதிவாளர் - 8, என, 74 காலியிடங்களுக்கு, முதன்மை எழுத்து தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. 

ஜூலை, 29 முதல், 31 வரை தேர்வு நடந்தது. இதில், 2,926 பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தி, அதன் முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மொத்தம், 148 பேரின் பதிவு எண், முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஒரு வாரத்தில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதல் விபரங்களை, 
www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், ’தமிழ்நாடு கைத்தறி துணிநுால் துறை இயக்குனர் பதவியில், 14 காலியிடங்களுக்கு, வரும், 29; சிறை அதிகாரி பதவியில், ஆறு இடங்களுக்கு, 30ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்’ என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog