அரசு வேலைக்கு 79.81 லட்சம் பேர் காத்திருப்பு

அரசு வேலைக்காக, 79.81 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து காத்திருக்கின்றனர். 

தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில், செப்., 30 நிலவரப்படி, 78.81 லட்சம் பேர், வேலைக்காக தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்களில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், 22.86 லட்சம்; கல்லுாரி மாணவர்கள், 

14.52 லட்சம்; 24 முதல், 35 வயது வரை, 30.72 லட்சம்; 56 வயது வரை, 11.65 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 57 வயதுக்கு மேற்பட்ட, 5,695 பேர், வேலைக்கு பதிவு செய்துள்ளதாகவும், வேலை வாய்ப்பகம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog