இன்று பள்ளிகள் திறப்பு


தொடர் மழைக்கால விடுமுறையைடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகளை தவிர்த்து, மற்ற அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர்த்து, மற்ற அனைத்துப் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் 10 பள்ளிகள் தவிர்த்து, மற்ற அனைத்துப் பள்ளிகளும் இன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog