TNPSC அறிவிப்பு : ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மாவட்ட கல்வி அதிகாரி (D.E.O) வேலை!


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 18+2 = 20

பதவி: மாவட்ட கல்வி அதிகாரி

தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,900 - ரூ.1,80,500

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரம் வெளியான நாள் அல்லது பணியில் சேரும்போது 58 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்றஇணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத்தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத் தேர்வு (Viva-Voce Test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.01.2019

முதல்நிலைத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம். முதன்மைத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

09.01.2019முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 02.03.2019

இதுகுறித்த மேலும் முழுமையான விபரங்களை அறிய

http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog