TN TRB Polytechnic Lecturer Notification 2019 Officially Released soon in this Month.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. 1,058 காலிபணியிடங்களுக்கு 1,22,000 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையடுத்து, பலருக்கும் மதிப்பெண் வித்தியாசம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை ரத்து செய்வதற்கான முடிவை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததை அடுத்து, தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மறு தேர்வு நடத்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் தயாராகி வருகிறது.

அதை ஆன்லைனில் மீண்டும் நடத்துவதற்கு வாரியம் விரிவான திட்டங்களை உருவாக்கி வருகிறது என்று அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.

முந்தைய தேர்வு செப்டம்பர் 16, 2017 இல் 1,058, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்களை நியமிக்க நடத்தப்பட்டது. “ஆனால், தற்போதைய காலியிடம் அதிகரித்துள்ளது என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவுத்துள்ளது.

Comments

Popular posts from this blog