டி.என்.பி.எஸ்.சி Group 2 Result வெளியீடு

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 2,667 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 1,338 குரூப் 2 அளவிலான பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் tnpsc.gov.in இல் அறிவிக்கை வெளியானது. மொத்தம் 1,338 காலியிடங்களுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.

குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து முதன்மைத் தேர்வு எனப்படும் மெயின் தேர்வு இந்தாண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில், 15 ஆயிரத்து 194 பேர் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in என்ற பக்கத்தில் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog