பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: தனித்தோ்வா்கள் ஜன.6 முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு தனித்தோ்வா்கள் வரும் ஜன.6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக அரசுத்தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தோ்வா்கள் ஜன. 6-ஆம் தேதி முதல் ஜன. 13-ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog