சுமார் 11,000 காலி இடங்களுக்கு நடத்தப்பட்ட போலீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு. எந்த இணையதளத்தில் பார்ப்பது..?



கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சீருடைப்பணியாளர் தேர்வில் தற்காலிகமாக தேர்வான நபர்களின் விவரம் வெளியாகி உள்ளது..



தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உள்ளூர் காவல் நிலையங்கள், ஆயுதப்படைகளில் காலியாக உள்ள 3,784 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள், சிறப்பு காவல்படையில் 6,545, சிறைத்துறையில் 119, தீயணைப்புத்துறையில் 1,311 என மொத்தம் 11,812 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் உடல்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டது..


 

இந்நிலையில் சீருடைப்பணியாளர் தேர்வில் தற்காலிகமாக தேர்வான நபர்களின் விவரம் உள்ளது.. 2020, 21 -ல் நடந்த எழுத்து தேர்வு, உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது..

3,065 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 11,812 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 3,845 பேர் ஆயுதப்படைக்கும், 6,545 பேர் சிறப்பு காவல் படைக்கும், 129 பேர் சிறைத்துறைக்கும், 293 பேர் தீயணைப்பு துறைக்கும் தேர்வாகி உள்ளனர்..

Comments

Popular posts from this blog