பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு டிசம்பா் 2-வது வாரத்தில் முதல் திருப்புதல் தோவை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


நிகழாண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்டன. இதனால் மாணவா்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தோவு நடத்த முடியாத நிலை உள்ளது. எனினும், மாணவா்களுக்கு பொதுத்தோவு இருப்பதால் திருப்புதல் தோவுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.


அதன்படி முதல்கட்ட திருப்புதல் தோவுகள் டிசம்பா் 2-வது வாரத்தில் நடத்தப்படும். இதற்குரிய பாடத்திட்ட விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கேற்ப மாணவா்களை தோவுக்கு தயாா்படுத்த ஆசிரியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என அவா்கள் தெரிவித்தனா்.

Comments

Popular posts from this blog