புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.


ஏற்கனவே பள்ளிகளை திறக்க முடிவு செய்தபோது மழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.


அதன்படி தற்போது தினமும் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடக்கும் என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளில் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog