அரசு காலி பணியிடங்கள் குறித்து டி.என்.பி.எஸ்.சி. திட்ட அறிக்கை இன்று வெளியீடு

அரசு பணிகளில் உள்ள காலியிடங்களுக்கு வரும் ஆண்டில் நடத்தப்படும் தேர்வுகள் மற்றும் புதிய விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி.இன்று வெளியிட உள்ளது.டி.என்.பி.எஸ்.சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியம் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்காக பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.மேலும் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விபரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும்.அதன்படி 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டி தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது


Comments

Popular posts from this blog