TRB வளாகத்தில் PG தேர்வர்கள் இன்று ( 29.12.2021 ) போராட்டம்.

 

TRB வளாகத்தில் இன்று 50 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் போராட்டம் நடத்தினர்.

தேர்வர்கள் கோரிக்கை :


நாங்கள் 2018-19 PGTRB தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து தகுதியான மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி வாய்ப்பு எங்களுக்கு மறுக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம் எங்களுடன் தேர்வு எழுதியவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ( 11.02.2020 ) பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர் ஆனால் எங்களுக்கு பணிவாய்ப்பு மறுக்கப்பட்டதால் நாங்கள் நீதிமன்றம் நாடி நீதிமன்ற உத்தரவு பெற்றதால் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 16.11.2021 அன்று வெளியிடப்பட்ட Revised Provisional Selection List ல் நாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். தாங்கள் கருணையுள்ளம் கொண்டு , மூன்றாண்டுகளாக பணி இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கு எங்களுக்கு பணிநியமன கலந்தாய்வு விரைவில் நடத்தி எங்களை பணியமர்த்தி எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என தேர்வர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog