கல்வித் தொலைக்காட்சி, அலைபேசி செயலி மூலமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தல்


கல்வித்தொலைக்காட்சி, அலைபேசி செய லிகள்வழியாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குகற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி யுள்ளது .


தமிழ்நாட்டில் கரோனா பரவல்காரணமாக 1 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு ஜன .31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது . இதையடுத்து , கல்வித் தொலைக் காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக் கப்பட்டு வருகின்றன . அதேநேரம் , பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை ஆக்கப்பூர்வ மாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந் தார் .


அதற்கேற்ப , அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் வாயிலாக 10. 12 ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன . இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது :


தனியார் பள்ளிகளில் கட்ட மைப்பு வசதிகள் இருப்பதால் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன .


அதேபோல , அரசுப் பள்ளி களில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி , அலைபேசி செயலிகள் மூலமாக கற்றல்பணி களை தொடர்ந்து மேற்கெள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது .


இதுதவிர 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் . அதன் பிறகு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகதளங்கள் வழியாக வாரம் தோறும் பாட வாரியாக குறுந் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் . குறுந்தேர்வில் மாணவர்கள் குறை வாக மதிப்பெண் பெறும் பகுதிகளை கண்டறிந்து ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .


இந்த பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகள் தொடர்ந்து கண்காணிப் பார்கள் .


இவ்வாறு அவர்கள் கூறினர் .

Comments

Popular posts from this blog