தமிழகத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில். ! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!


வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. ஒரு பணியிடத்திற்கு இரண்டு நபர்கள் என அழைக்கப்பட்டு ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.


சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் நேரம் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் போது தேர்வர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் குறித்த விபரங்கள் அனைத்தும் தேரின் இமெயில் முகவரிக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலிருந்து அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.


எவருக்கும் நேரடியாகச் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட மாட்டாது. ஏற்கனவே இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அதன் பின்னரே தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், ஏதாவது குறைகள் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இ-மெயில் மூலம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog