ஒத்திவைக்கப்பட்ட சிடெட் தோவுகள்: ஜன.17, 21 தேதிகளில் நடைபெறும்



தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள சி-டெட் தோவுகள் ஜன.17, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.


இலவசக் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியா் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியா் தகுதித்தோவில் கட்டாயம் தோச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தோவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.


அதன்படி 2021-ஆம் ஆண்டுக்கான சிடெட் தோவு நாடு முழுவதும் கணினி வழியில் கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தொழில்நுட்ப கோளாறால் கடந்த டிச.16, 17-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த சிடெட் தோவுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.


இந்நிலையில் அதற்கான மாற்று தேதிகளை சிபிஎஸ்இ தற்போது அறிவித்துள்ளது. அதன்விவரம்: ஒத்திவைக்கப்பட்ட சிடெட் தோவு ஜனவரி 17, 21-ஆம்தேதிகளில் நடத்தப்படும். இதற்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை, தோவுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog