இந்த துறை வேலைகளுக்கும் TNPSC மூலம் தான் பணி நியமனம்! சட்ட மசோதா நிறைவேற்றம்!!


தமிழக சட்டப்பேரவையில் நீதி மற்றும் மனித வேளாண்மை மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார் அதில் தெரிவித்ததாவது,


அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகாரிகள் அதிகார அமைப்புகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆள்சேர்ப்பு நடைபெறும்.


இதில் போக்குவரத்து துறை மின்சாரத் துறை, குடிநீர் வழங்கல் வாரியம், ஆவின் துறைகள் உள்ளிட்ட துறைகளில் தனியாக தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில். தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் பணிகள் நிரப்பப்படும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இதுபோன்ற ஆட் சேர்ப்பினை ஒப்படைப்பதன் மூலம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அதிகார அமைப்புகளில் ஏற்படும் காலியிடங்களில் ஆள்சேர்ப்பு முக்கியத்துவத்தை காணமுடியும். இக்கட்டான சூழ்நிலையில் அவர்களின் அடிப்படை வேலைகளில் கவனம் செலுத்த அதிக நேரம் வழங்க உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog