பொதுத்தேர்வு: தமிழகம் முழுவதும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு...!!!!!





தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.


இதையடுத்து கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வருகிற 16-ம் தேதி மழலையர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதனிடையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பல்வேறு தருணங்களில் விளக்கியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


அதன்படி பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருக்கின்றன. தற்போது 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வானது நடைபெற்று வருகிறது. அதன்பின் மார்ச் மாதத்திற்குள் பாடத்திட்டங்களை விரைவாக முடித்து 2-வது கட்ட திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் வருகிற நாட்களில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்தி மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வழக்கமாக மார்ச் முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி இறுதியில் முடியும். அதனை தொடர்ந்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் மாத மத்தியில் முடியும். இந்த வருடம் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தாலும் பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் நலன் பாதிக்கப்படாத அடிப்படையில் பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விரைவில் ஆலோசனை நடத்துவார்கள்.


அப்போது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அரசு தேர்வுத்துறை அதிகாரிகளுடன் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் பொதுத்தேர்வை எத்தனை நாட்கள் நடத்துவது..? ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடுவதா..? தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதா என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையானது இறுதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் உள்ள இந்த காலகட்டத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் பிளஸ்-1 பொதுத்தேர்வு உள்ளிட்ட பிற வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும்.

Comments

Popular posts from this blog