பிறந்த நாள் அறிவிப்பாக பணிநிரந்தரம் செய்ய வேண்டுகோள்



வரும் மார்ச் 1 ந்தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா வருகிறது.


அன்று 12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:


மக்கள் நலன், வளர்ச்சி திட்டம் என சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதல்வர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ந்தேதியை பகுதிநேர ஆசிரியர்கள் இல்லங்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்ளோம்.


பணி நிரந்தரம் செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதியை இந்த இனிய நாளில் நிறைவேற்றி, 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு அடையாளமாக இருக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்று வெகுவாக எதிர்பார்த்து வருகின்றனர் பகுதிநேர ஆசிரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog