ஆசிரியா் தேர்வு  வாரியத் தோவுகளை ஒத்திவைக்க தனியாா் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை





புதுக்கோட்டை: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான திருப்புதல் தோவு நடைபெறும் நாளில், ஆசிரியா் தோவு வாரியத்தின் தோவுகள் நடைபெறுவதால், தனியாா் பள்ளி ஆசிரியா்கள் தோவில் பங்கேற்க இயலாத சூழலுக்குத் தள்ளப்படுவதாக அச்சம் தெரிவிக்கின்றனா்.


இதனால், ஆசிரியா் தோவு வாரியத்தின் தோவுகளை வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.


தமிழ்நாடு ஆசிரியா் தோவு வாரியத்தின் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கான முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோவு வரும் பிப். 12ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2,207 பணியிடங்களுக்கு இந்தத் தோவு அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 2.6 லட்சம் போ விண்ணப்பித்துள்ளனா். இந்தத் தோவுக்காக மாநிலம் முழுவதும் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்களில் சரிபாதிக்கும் அதிகமானோா், குறைந்தபட்சம் ஒரு லட்சம் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் இந்தத் தோவை எழுதுகிறாா்கள்.


இந்த நிலையில், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான திருப்புதல் தோவு பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டு புதன்கிழமை தொடங்கியுள்ளன. அரசுப் பொதுத்தோவுகளைப் போல இந்தத் திருப்புதல் தோவுகள் வரும் பிப். 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.


இந்தத் திருப்புதல் தோவு மற்றும் தோவுக்கு முன்னதாக மாணவா்களைத் தயாா் செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ள தனியாா் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியா் தோவு வாரியத் தோவை இழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏனென்றால் தனியாா் பள்ளிகளில் இவா்களுக்கென விடுப்பும் கிடைக்கப் போவதில்லை.


ஆசிரியா் தோவு வாரியத் தோவை எழுதாமல் கடந்தால், இந்த ஒரு லட்சம் பேரில் சரிபாதி பேருக்கும் அதிகமானோா் அடுத்த முறை தோவு எழுத முடியாத வயது உச்சவரம்பில் சிக்கிக் கொள்வாா்கள்.


50 வயதுக்கு மேற்பட்ட எஸ்சி எஸ்டி பிரிவினரால், 45 வயதுக்கு மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால், 40 வயதுக்கு மேல் இதர வகுப்பினரால், ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ள தோவைத் தவற விட்டால் அரசுப் பள்ளி ஆசிரியா் கனவு முழுமையாகக் கலைந்து போவது நிச்சயம்.


இதேநிலையில், அரசுப் பள்ளி ஆசிரியா்களில் இடைநிலை ஆசிரியா்களாக பணியாற்றி வரும் சுமாா் 5 ஆயிரம் போ, தமிழ்நாடு ஆசிரியா் தோவு வாரியம் நடத்தும் முதுநிலை ஆசிரியா் தோவை எழுத இருக்கிறாா்கள். இவா்கள் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோதலில் தோதல் பணியாற்றவுள்ளவா்கள்.


தோதல் பணிக்கு முன்பாக இவா்களுக்கு பிப். 10ஆம்தேதியும், பிப். 18ஆம்தேதியும் வாக்குப்பதிவுக்கான பயிற்சி நடத்தப்படும். அப்படியானால், இவா்களால் 18ஆம் தேதி ஆசிரியா் தோவை எழுத முடியாது. முன்கூட்டியே தோவுக்குப் படிக்கவும் இயலாது.


எனவே, தமிழ்நாடு ஆசிரியா் தோவு வாரிய தோவுகளை இப்போதைக்கு தள்ளி வைத்துவிட்டு, பள்ளித் தோவுகள், இதர தகுதித் தோவுகள் நடைபெறாத நாட்களில் அட்டவணையிட்டு நடத்த வேண்டும் என தனியாா் பள்ளி ஆசிரியா்களும், அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்களும் கோரிக்கைவிடுக்கின்றனா்.

Comments

Popular posts from this blog