புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு : 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும்!!


புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 10ம்தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன.


இதன்பின்னர், தொற்று குறையாத நிலையில், 10ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18ம் தேதி மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.


அதன்படி, புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி நுழைவு வாயிலில் அனைவரையும் தெர்மா மீட்டர் கொண்டு பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog