விழுப்புரத்தில் பரபரப்பு!! ஆசிரியருக்காக போராட்டத்தில் குதித்த மாணவர்கள், பெற்றோர்கள்!!


தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி நெகனூர் புதூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அரசு நடுநிலைப் பள்ளியில் 100 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.


இங்கு 1 தலைமை ஆசிரியர், 3 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதிலும் ஒரு ஆசிரியர் சமீபத்தில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதுவரை மாற்று ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால், பாடங்களை கற்பதில் மாணவர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மாற்று ஆசிரியரை நியமிக்கவும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாற்று ஆசிரியர் நியமிக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தார். இதன் பின்னர் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.


Comments

Popular posts from this blog